For Daily Alerts
Just In
அமெரிக்காவின் தடைக்கு அஞ்ச மாட்டோம்: லக்ஷர்-ஏ-தொய்பா கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்:
எங்கள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருப்பதால் நாங்கள் பயப்பட மாட்டோம், இந்தியாவிடமிருந்துகாஷ்மீரை "விடுதலை" செய்ய தொடர்ந்து போராடுவோம் என்று லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பு அறிவித்துள்ளது.
தீவிரவாதத்திலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை. கடந்த 13ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்கும்நாங்கள் பொறுப்பல்ல என்று மஜாஹித் கூறினார்.
இந்தியாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் விடுதலைக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோமேதவிர, காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்கள் எங்களுடைய இலக்கல்ல என்றார் மஜாஹித்.
தீவிரவாதத்தில் எங்கள் அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று அமெரிக்கா, இந்தியா உள்பட யாரும்நிரூபிக்கட்டும், பார்க்கலாம் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]