எதையும் சந்திக்க பாகிஸ்தான் ராணுவம் தயார்: முஷாரப்
பெய்ஜிங்:
இந்தியா மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றுஅந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் சவால் விடுத்துள்ளார்.
சீனாவில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் முஷாரப்.
எங்கள் இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. அதனால் பதற்றம் மிகுந்துள்ள இரு நாடுகளுக்கிடையேமேலும் பதற்றத்தை உருவாக்குவதற்கு இந்தியா முயற்சி செய்யாது என்றும் முஷாரப் நம்பிக்கையுடன் கூறினார்.
எல்லைப் பகுதிகளில் அமைதியையும் இந்தியாவுடன் நட்புறவையுமே என்றும் பாகிஸ்தான் விரும்புகிறது என்றுமுஷாரப் கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையை முறையாகக் கையாளாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல்ஏற்படத்தான் செய்யும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் எங்கள் நாட்டை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும் என்றும் சற்றே ஆணவத்துடன்கூறியுள்ளார் முஷாரப்.
ஆக்ரா ஒப்பந்தத்தின்போது, இந்தியத் தலைவர்கள்தான் தன்னுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும்அதனால்தான் ஆக்ரா ஒப்பந்தம் தோற்றுப் போனது என்றும் முஷாரப் தெரிவித்தார்.