ஜனாதிபதியைச் சந்திக்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைச் சந்தித்துப்பேசவுள்ளார்.
முக்கிய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தமுக்கியமான கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறைஅமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று மாலை ஜனாதிபதியை வாஜ்பாய் சந்திக்கவுள்ளார்.
எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் இவ்வேளையில் பிரதமர்-ஜனாதிபதி சந்திப்பு முக்கியத்துவம்பெற்றுள்ளது.
இந்தியத் தூதரும் அவசர அவசரமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்நடத்த முழு அளவில் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications