ராமேஸ்வரத்தில் பயங்கர சூறாவளி: 4 மீனவர்களைக் காணோம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் கடந்த இரு தினங்களாக பயங்கர சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகே புயல் சின்னம் உருவாகியிருப்பதால் கடந்த சில நாட்களாக தமிழகம்முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதையடுத்து ராமேஸ்வரத்தில் பயங்கரமான சூறைக்காற்று வீசியது. கடற்கரையோரத்தில் உள்ள பல குடிசைகள்சூறைக்காற்றில் பறந்தன.
கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் கட்டுமரங்களும் படகுகளும் சூறாவளியில் அடித்துசெல்லப்பட்டன.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.
இதனால் அந்த மீனவர்களின் கதி என்ன என்று தெரியாமல் அவருடைய உறவினர்களும் அப்பகுதி மக்களும்தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் மீன்வளத் துறை அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications