For Quick Alerts
For Daily Alerts
Just In
பாகிஸ்தானுக்கு ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தம்
டெல்லி:
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலும், பஸ்சும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்துசெய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அமிர்தசரசிலிருந்து லாகூருக்கு ஓடிக் கொண்டிருந்த சாம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் ரத்துசெய்யப்படுகிறது.
மேலும் டெல்லியிலிருந்து லாகூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருந்த பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இந்தப் போக்குவரத்தால் இரு நாட்டு மக்களும் தங்களுடைய சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு வசதியாகஇந்தப் பத்து நாள் காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]