For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்புக்கு அமெரிக்கா தடை: இந்தியா வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

லக்ஷர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்புக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதை இந்திய அரசுவரவேற்றுள்ளது.

இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூடியபாதுகாப்புக் கமிட்டிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியுறவுத் துறை ஜஸ்வந்த் சிங் நிருபர்களிடம்பேசும்போது, அமெரிக்காவின் தீவிரவாதப் பட்டியலில் லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பும் இருப்பது குறித்துமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், லக்ஷர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-ஏ-முகம்மத்அமைப்புகளை பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும் என வற்புறுத்தப் போவது பற்றி விவாதிக்கப்பட்டது.

கடந்த 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்டது பற்றி நடந்து வரும் விசாரணை குறித்தும் பாதுகாப்பு குறித்தும்இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் தவிர உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் முப்படை தளபதிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தப் பாதுகாப்புக்கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X