For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார், பஸ் மோதல்: தேவகோட்டை டாக்டர் குடும்பம் பலி

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸூம் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் சென்ற டாக்டர் குடும்பம்,கார் டிரைவர் அனைவரும் சமபவ இடத்திலேயே இறந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தவர்லட்சுமணன் (50).

அவர் மனைவி பானு (45), மகன் பாலாஜி (25), மகள் புவனேஷ்வரி (20) ஆகியோருடன் காரில் திருச்சிகோயிலுக்கு சென்று விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 க்கு தேவகோட்டைக்கு திரும்ப சென்றுகொண்டிருந்தனர்.

காார டிரைவர் மெய்யப்பன் ஓட்டி வந்துள்ளார். அப்போது புது கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுபஸ்ஸூம், காரும் கீரனூர் அருகில் உள்ள கல்லுகுவியல் பட்டி என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிவிபத்துக்குள்ளானது.

விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர் குடும்பத்தினரும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்தவிபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து டாக்டர் குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டது. விபத்து குறித்து கீரனூர் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X