கார், பஸ் மோதல்: தேவகோட்டை டாக்டர் குடும்பம் பலி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸூம் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் சென்ற டாக்டர் குடும்பம்,கார் டிரைவர் அனைவரும் சமபவ இடத்திலேயே இறந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தவர்லட்சுமணன் (50).

அவர் மனைவி பானு (45), மகன் பாலாஜி (25), மகள் புவனேஷ்வரி (20) ஆகியோருடன் காரில் திருச்சிகோயிலுக்கு சென்று விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 க்கு தேவகோட்டைக்கு திரும்ப சென்றுகொண்டிருந்தனர்.

காார டிரைவர் மெய்யப்பன் ஓட்டி வந்துள்ளார். அப்போது புது கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுபஸ்ஸூம், காரும் கீரனூர் அருகில் உள்ள கல்லுகுவியல் பட்டி என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிவிபத்துக்குள்ளானது.

விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர் குடும்பத்தினரும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்தவிபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து டாக்டர் குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டது. விபத்து குறித்து கீரனூர் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+