ராஜஸ்தான் எல்லையில் விமானப் படை ரேடார்கள்
ஜம்மூ:
பாகிஸ்தான் தரப்பில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதற்கேற்றவகையில் இந்தியப் படைகளும் பல முனைகளில் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மூ-பூஞ்ச் இடையிலான எல்லையில் இந்தியப் படைகள் முழு அளவில் குவிக்கப்பட்டுள்ளன. இது தவிரகுஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைகளிலும் இந்திய ராணுவம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானில் கங்காநகர் எல்லைப் பகுதிக்கு இந்தியப் படைகளும் ஆயுதங்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்தப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து இந்திய ராணுவமும் ரோந்துப்பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
இங்கு 1971ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சிமெண்ட் பதுங்குக் குழிகளை சுத்தப்படுத்தி ராணுவம் ஆக்கிரமிக்கஆரம்பித்துள்ளது.
அதே போல எல்லை முழுவதும் நடமாடும் ரேடார்களையும் இந்திய விமானப் படை கண்காணிப்புக்குஅனுப்பியுள்ளது.
லிசனிங் போஸ்ட் எனப்படும் எதிரியின் செய்திப் பரிமாற்றத்தை ஒட்டுக் கேட்கும் கண்காணிப்பு கூடாரங்களும்,வார்னிங் போஸ்ட் எனப்படும் எச்சரிக்கை அனுப்பும் கட்டமைப்பும், ஆபரேஷன் போஸ்ட் எனப்படும் தாக்குதல்நடத்தும் படைப் பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.
எல்லையில் பாகிஸ்தான் குவித்துள்ள சிறப்புப் படைகள் எங்களின் தொடர் கண்காணிப்பின் கீழ் உள்ளன எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.