"அரசு மருத்துவமனைகளில் ஒரு மாதத்துக்கு மட்டும் பார்வையாளர்கள் கட்டணம்"
சென்னை:
பார்வையாளர்கள் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அரசு மருத்துவமனைக்குள் செல்லும் பார்வையாளர்களிடம்ரூ.5 நுழைவுக் கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மட்டும் வசூல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில்பார்வையாளர்கள் செல்வதற்கு தமிழக அரசு ரூ.5 கட்டணம் விதித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் ஏ.பி. சூரியபிரகாசம் வழக்குதொடர்ந்தார். இதனால் கட்டணம் வசூலிக்க கடந்த 11ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்க கோரி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆர்.ராஜம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குநீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
நுழைவுக் கட்டணத்தை ஒரு மாதத்திற்கு வசூல் செய்யலாம். இதற்கு தனியாக கணக்கு வைத்திருக்க வேண்டும். ரசீதுபுத்தகத்தின் அடிக்கட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப் படுகிறது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.