நாளை ராணுவ அதிகாரிகளைச் சந்திக்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
நாளை (திங்கள்கிழமை) சீனாவிலிருந்து திரும்பும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ராணுவ உயர்அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத் துறைக்கு கடனுதவி அளித்ததோடு நில்லாமல், அந்நாட்டுக்கு சில போர்விமானங்களையும் சீனா வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கிடையே இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இரு தரப்பு ராணுவத்தினரும் தொடர்ந்து குவிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சீனாவிலிருந்து நாளை பாகிஸ்தான் திரும்பும் முஷாரப், ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்துப்பேசவுள்ளார்.
எந்த நேரம் வேண்டுமானாலும் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கருதப்படுவதால், முஷாரப் கூட்டியுள்ள இந்தக்கூட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் தாக்குதலை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றுதெரிகிறது.
இக்கூட்டம் முடிந்தவுடன் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தையும் முஷாரப் கூட்டுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.