Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ ரகசியம் விற்றவர் சிறையில் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டிணம்:

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய கடற்படையின் ரகசியங்களை விற்று கைது செய்யப்பட்டஅதிகாரி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்திய கடற்படையின் கிழக்குப் படைப் பிரிவின் ஆயுதக் கிடங்கில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்ராஜ்குமார் (52). அவர் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி விசாகப்பட்டிணம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ. உளவாளியான ராஜ்பீர் சிங் என்பவருக்கு இவர் கடற்படையின் ரகசியங்களை விற்றதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர் விசாகப்பட்டிணம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன் கேட்டு 3 முறை இவர் விண்ணப்பித்தும்நீதிமன்றம் இவரை ஜாமீனில் விட மறுத்துவிட்டது.

இந் நிலையில் அவர் நேற்று சிறையின் கழிப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+