பாதுகாப்பு விவரங்களை பாகிஸ்தானுக்கு அளித்த நாடாளுமன்ற அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாகிஸ்தான் தூதரக அலுவலருக்கு ரகசியமாக அளித்து வந்தநாடாளுமன்ற அதிகாரி ஒருவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அஜய் குமார் என்ற அதிகாரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு பேக்குடன் பாகிஸ்தான் தூதரக அலுவலரானமுகம்மது ஷெரீப் கான் என்பவரைச் சந்தித்துக் கொடுத்துள்ளார்.

அப்போது அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த டெல்லி போலீசார், அந்த பேக்கை சோதனையிட்டனர்.

இந்தியப் பாதுகாப்புத் துறை, அணு ஆயுத ஆராய்ச்சி, ரயில்வே பாதுகாப்பு, கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம்ஆகியவை தொடர்பான ஆவணங்கள் அந்த பேக்கில் இருந்தன.

இவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அஜய் குமாரைக் கைது செய்தனர். ஷெரீப் கானையும் சிறிதுவிசாரித்து விட்டு பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைத்து விட்டனர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை ஏற்கனவே அஜய் குமாரிடம் ஷெரீப் கான் கேட்டுக் கொண்டேஇருந்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக சிறப்பு பாஸ் ஒன்றையும் தனக்கு தரும்படியும்ஷெரீப் கான் அடிக்கடி இவரிடம் கேட்டுள்ளார்.

நாடாளுமன்றப் பாதுகாப்பு வீரர்கள் எப்போதெல்லாம் ஆயுதங்கள் இல்லாமல் இருப்பார்கள் என்றவிவரங்களையும் ஷெரீப் கானிடம் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தூதரகத்திற்கும் தொடர்புஇருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அஜய் குமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+