சபரிமலையில் கூட்ட நெரிசல்: தமிழர் உட்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்காக நின்ற வரிசையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சென்னையைச் சேர்ந்த ஐயப்பபக்தர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சபரிமலையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடப்பதை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி தரிசனத்திற்காக நின்ற வரிசையில் அளவுக்கதிகமான நெரிசல்ஏற்பட்டுள்ளது.
அதனால் சரங்குத்தி பகுதியில் ஒரு பக்தரும், சன்னிதானம் பெரிய நடைபந்தலில் ஒரு பக்தரும் நெரிசலில் சிக்சிஇறந்தனர்.
இந்த இருவரில் ஒருவர் சென்னை-குரோம்பேட்டையைச் சேர்ந்த சுந்தர் (32). மற்றொருவரின் விபரம்தெரியவில்லை.
இதையடுத்து கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications