என்னை செங்கோட்டையன் கடத்தவில்லை: பாமக பெண் எம்.எல்.ஏ. விளக்கம்
சென்னை:
செங்கோட்டையன் தன்னைக் கடத்தவில்லை என்று தாராபுரம் பெண் எம்.எல்.ஏவான சிவகாமி வின்சென்ட்கூறியுள்ளார்.
சிவகாமி வின்சென்டையும், அவரது குடும்பத்தாரையும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன்கடத்தி மறைத்து வைத்திருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்று நிருபர்களை அழைத்து பேட்டியளித்தார் சிவகாமி.எம்.எல்.ஏ. விடுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
செங்கோட்டையனை நான் பார்த்ததில்லை. அவர் என்னைக் கடத்தவும் இல்லை.
நான் சிகிச்சைக்காக 3 நாட்கள் கேரளா சென்றிருந்தேன். அந்த நேரத்தில்தான் என்னைக் கடத்தி விட்டதாக யாரோவதந்தி கிளப்பி உள்ளனர். அதைக் கேட்டு நான் கேரளாவிலிருந்து வந்துள்ளேன்.
பாமகவிடமிருந்துதான் எனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே இனி நான் அக்கட்சியுடன் சேராமல்தனித்தே செயல்படுவேன் என்றார் சிவகாமி.












Click it and Unblock the Notifications