திண்டுக்கல் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

திண்டுக்கல் அருகே உள்ள ஏ. வெள்ளோடு கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு சிலைவைக்கப்பட்டது. இந்த சிலை சிமெண்ட்டினால் செய்யப்பட்டிருந்தது.

ஆண்டு தோறும் எம.ஜி.ஆர். பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தன்று, அப்பகுதி பொதுமக்கள் இச்சிலைக்குஅஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டும் அவரது நினைவு தினத்தை ஒட்டி, வெள்ளையடிப்பதற்காக அதிமுக பிரமுகர் ஆரோக்கியம் சிலைஇருந்த இடத்திற்கு சென்றார். அப்போது சிலையின் கைவிரல்களில் ஒன்றும், வலது பக்க நெஞ்சு பகுதியும் கல் வீசிஉடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் சிலை உடைக்கப்பட்டு இருக்கும் செய்தி கேட்டு மக்கள் கூடினர். இதனால்அந்த இடம் சிறிது நேரத்துக்கு பரபரப்புடன் காணப்பட்டது.

பிறகு சிலை உடைந்து கிடப்பது குறித்து அம்பாதுரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சிலையை உடைத்தவர்களை கண்டு பிடிக்காவிட்டால் போராட்டத்தில்ஈடுபடுவோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+