ஆண்டிப்பட்டி தொகுதிக்கு பிப்ரவரி 21ல் இடைத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதி உள்பட 3 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டுபிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை)கூறியுள்ளது.

டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து, ஆண்டிப்பட்டிதொகுதியில்தான் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன்ஏற்கனவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான வை. பெருமாளும், வாணியம்பாடி தொகுதிஎம்.எல்.ஏவான அப்துல் லத்தீப்பும் மரணமடைந்ததையடுத்து, அவ்விரு தொகுதிகளும் காலியாகின.

இதையடுத்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்தே இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர்கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணி"ப்பூர் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்தேதிகளை இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அப்போது தற்போது காலியாகவுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல்நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்த மக்களவை இடைத் தேர்தல் நடக்கும் தேதியிலேயே தமிழகம் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ளசட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 21ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+