For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (புதன்கிழமை) அதிகாலைசொர்க்கவாசல் திறந்தது.

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு விழாவை காண ஸ்ரீரங்கத்துக்குவந்துள்ளனர்.

அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தை விட்டு புறப்பட்ட ரெங்கநாதர் 5 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தார்.அப்போது சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட காட்சியைக்கண்டு களித்தனர். அப்போது "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷமும் "ரங்கா ரங்கா" என்ற கோஷங்கள்விண்ணைப் பிளந்தன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல்திறக்கப்பட்டது.

சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில், மதுரை-அழகர் கோயில் உள்பட அனைத்துவைணவ கோயில்களிலும் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.

தொடர்ந்து ராப்பத்து நாட்களிலும் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான ஜனவரி முதல் தேதி திருக்கைத்தல சேவை நிகழ்ச்சியும், இரண்டாம் தேதிதிருமங்கை மன்னன் வேடுபறி உற்சவமும், 5ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X