For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் வேண்டாம்: பாகிஸ்தான் மன்றாடல்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமபாத்:

இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எல்லையில் நடத்தி வந்ததுப்பாக்கிச் சூட்டையும் குறைத்துக் கொண்டுள்ளது.

முதலில் நாடாளுமன்றத்தைத் தீவிரவாதிகள் மூலம் தாக்கிவிட்டு பின்னர் எல்லையில் படைகளைக் குவித்துபிரச்சனையை உருவாக்கியது பாகிஸ்தான்.

இதையடுத்து இந்தியா மிகக் கடும் நடவடிக்கைகளில் இறங்கியது. தூதரை திரும்ப அழைத்துவிட்டு ராணுவத்தைஎல்லையில் தயார்படுத்தி வருகிறது.

இந் நிலையில் இந்தியாவுடன் போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது. பாகிஸ்தானின்வெளியிறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமத் கான் கூறுகையில்,

இந்தியாவுடன் அமைதியாகப் பேசித் தான் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறோம். ஆரம்பத்தில் இருந்தேபொறுமையைக் கடைபிடித்து வருகிறோம். இந்தியா தூண்டிவிட்டாலும் கூட நாங்கள் படைகளைக்குவிக்கவில்லை. ஏனெனில் அது இந்தப் பிராந்தியத்தில் அமைதியை கெடுத்துவிடும். போர் வேண்டாம் என்றுநினைக்கிறோம் என்றார்.

இந்தியா இவ்வளவு கடுமையான நடவடிக்கைளில் இறங்கும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை என்றுதெரிகிறது. இதனால் தான் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை கைது செய்தது.

போரை விரும்பவில்லை என ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பலமுறை கூறிவிட்டார். சீனாவுக்கு ஓடிஅவர்களின் உதவியைக் கேட்டுப் பார்த்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தாரும் போரை விரும்பவில்லை என்றார். இப்போது வெளியுறவுசெய்தித் தொடர்பாளர் மீண்டும் போர் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியப் படைகள் மீது நடத்தி வந்த கடும் தாக்குதலையும் இன்று மாலையில்பாகிஸ்தான் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

ஆனால், போரை இந்தியாவும் விரும்பவில்லை, அது நம் மீது திணிக்கப்பட்டு வருகிறது என பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X