போர் வேண்டாம்: பாகிஸ்தான் மன்றாடல்
இஸ்லாமபாத்:
இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எல்லையில் நடத்தி வந்ததுப்பாக்கிச் சூட்டையும் குறைத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இந்தியா மிகக் கடும் நடவடிக்கைகளில் இறங்கியது. தூதரை திரும்ப அழைத்துவிட்டு ராணுவத்தைஎல்லையில் தயார்படுத்தி வருகிறது.
இந் நிலையில் இந்தியாவுடன் போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது. பாகிஸ்தானின்வெளியிறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமத் கான் கூறுகையில்,
இந்தியாவுடன் அமைதியாகப் பேசித் தான் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறோம். ஆரம்பத்தில் இருந்தேபொறுமையைக் கடைபிடித்து வருகிறோம். இந்தியா தூண்டிவிட்டாலும் கூட நாங்கள் படைகளைக்குவிக்கவில்லை. ஏனெனில் அது இந்தப் பிராந்தியத்தில் அமைதியை கெடுத்துவிடும். போர் வேண்டாம் என்றுநினைக்கிறோம் என்றார்.
இந்தியா இவ்வளவு கடுமையான நடவடிக்கைளில் இறங்கும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை என்றுதெரிகிறது. இதனால் தான் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை கைது செய்தது.
போரை விரும்பவில்லை என ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பலமுறை கூறிவிட்டார். சீனாவுக்கு ஓடிஅவர்களின் உதவியைக் கேட்டுப் பார்த்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தாரும் போரை விரும்பவில்லை என்றார். இப்போது வெளியுறவுசெய்தித் தொடர்பாளர் மீண்டும் போர் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியப் படைகள் மீது நடத்தி வந்த கடும் தாக்குதலையும் இன்று மாலையில்பாகிஸ்தான் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
ஆனால், போரை இந்தியாவும் விரும்பவில்லை, அது நம் மீது திணிக்கப்பட்டு வருகிறது என பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications