நாளை உண்ணாவிரதம் உறுதி: அரசு ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் ரத்து செய்ததைக் கண்டித்து, நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றுஅரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு கஜானா காலி என்று காரணத்தை கூறி பஸ் கட்டணம், மின் கட்டணத்தை உயர்த்தியதோடு அரசுஊழியர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும்காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் ரத்து செய்த சில சலுகைகளை மீண்டும் வழங்குவதாக நேற்று முன் தினம்(திங்கட்கிழமை) அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு ஊழியர்களின் அவசர கூட்டம்கூட்டப்பட்டது.

அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி கூறுவதாவது:

ஒரு சில சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. அதனால் திட்டமிட்டபடி நாளைஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

அதைத் தொடர்ந்து அரசின் அணுகுமுறையைப் பொறுத்து போராட்டத்தின் தன்மை இருக்கும் என்று அவர்கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+