For Daily Alerts
Just In
கம்பம் அருகே அரசு பஸ் மோதி 3 பேர் பலி
கம்பம்:
கம்பம் அருகே அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பலியாகினர்.
தேனி மாவட்டம் கருணாக்கமுத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (30), வனம் (29), சின்னன் (26). இவர்கள் 3பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் இரு சக்கர வாகனம் ஒன்றில், உத்தம பாளையத்தில் இருந்து கம்பம் நோக்கிசென்று கொண்டிருந்தனர்.
கம்பம் அருகே கள்ளர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த அரசு பஸ் ஒன்று இவர்கள்சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இரு சக்கரவாகனத்தில் சென்ற ஈஸ்வரன், வனம் ஆகியோர் அநத இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்தசின்னன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக, அரசு பஸ் டிரைவர் செல்லையா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]