பட்டுக்கோட்டை: சாக்கடையில் கிடந்த பெண்குழந்தை
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை:
பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ளசாக்கடையில் கிடந்தது.
பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள சாக்கடையில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அவ்வழியே வந்தநகராட்சி துப்புரவு தொழிலாளி ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு சாக்கடையில் பார்த்தார்.
பிறந்த சில மணி நேரமே ஆன அந்த குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்காமல் கிடந்தது. உடனடியாக அந்ததொழிலாளி குழந்தையை தூக்கி வந்து பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் போலீசார்கள் அந்த குழந்தையை உடனே பட்டுக்கோட்டை அரசுபொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸபெக்டர் துர்கா வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications