For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி ஊழல் வழக்கு: ஜெயலலிதா விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான ரூ.6.5 கோடி நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து அவரைவிடுவித்து சென்னை தனி நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் ஜெயலலிதா ஊழல் செய்ததால் அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்புஏற்பட்டதாகவும் தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வந்தது.

ஜூன் 1999ல் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவை இந்தவழக்கு விசாரணையில் இருந்து விடுவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தது.

ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை மீண்டும் விசாரிக்க ஆணையிட்டது. இதையடுத்து சிறப்புநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்து வந்தது.

அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிந்துவிட்ட நிலையில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்துஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.

நிலக்கரி வாங்கியதில் ரூ.6.5 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால்இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பத்து பேருமே விடுதலை செய்யப்படுவதாக வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதிஎஸ்.எஸ்.பி. தார்வேஸ் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X