டோவ் ரக ஏவுகணைகளைக் குவிக்கும் பாகிஸ்தான்
ஜம்மூ:
காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்களையும் பாலங்களையும் டோவ் ரக ஏவுகணைக் கொண்டு தாக்க பாகிஸ்தான்திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக இந்த ஏவுகணைகள் பீரங்கிகளைத் தாக்கத் தான் பயன்படுத்தப்படும். ஆனால், இதைக் கொண்டுவீரர்கள் நிறைந்த முகாம்களைத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும். அதே போல பாலங்களை இதைக் கொண்டுமுழுமையாக தகர்க்க முடியும்.
அக்னூர்-பலான்வாலா, சுந்தர்பன்ஜி, நெளசேரா, மேட்கர், பூஞ்ச், பாலகோட், கெர்னி ஆகிய இடங்களில் இந்தவாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் உள்ள பாலங்களைத் தகர்த்து இந்தியப் படைகளின் நடமாட்டத்தையும், ஆயுதங்கள் கொண்டுசெல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளால் 800 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இரும்பைக் கூட துளைத்துவிட முடியும். 3 முதல் 5கி.மீ. தொலைவில் இருந்து கொண்டு இந்த ஏவுகணையைச் செலுத்த முடியும்.
இதையடுத்து பாலங்களைச் சுற்றி பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது. பாலங்கள் தகர்ந்தாலும் வேறுவழிகளில் படைகளையும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஏவுகணைகளைச் செலுத்தும் வாகனங்களை தாக்கும் ஆயுதங்களும் எதிர்-ஏவுகணைகளும்குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிடம் உள்ள நாக் ரக ஏவுகணைக் கொண்டு பாகிஸ்தானின் டோவ் ஏவுகணை வாகனங்களை சிதறடிக்கமுடியும். எனவே, இவை எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு...:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிதாக பிடிபட்ட பல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து காஷமீருக்குள் நுழைய முயன்றுகொண்டிருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஹர்கத்-உல்-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 30 தீவிரவாதிகள் நேற்றுபிடிபட்டனர். உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு வருமாறு தங்களுக்குபாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. உத்தரவிட்டுள்ளதாக இவர்கள் கூறினர்.
இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காகத் தான் இவர்களை பாகிஸ்தான் அழைத்துள்ளது என்பதுதெரியவந்தவுடன் இக் கும்பலை நார்த்தர்ன் அலையன்ஸ் வீரர்கள் அடித்து உதைத்து இழுத்துச் சென்று சிறையில்அடைத்துள்ளனர்.
சுமார் 400 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக காஷ்மீரில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகநார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்தனர்.