உளுந்தூர்பேட்டை அருகே ஜீப்-பஸ் மோதல்: 5 பேர் பலி
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்டை அருகே ஜீப்பும், அரசு விரைவுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஜீப்பில் சென்றசென்னையைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர்.
சென்னை அருகே உள்ள பாலவாக்கத்தை சேர்ந்த சசி வாட்டர் சப்ளை உரிமையாளர் பரமசிவம் (48). இவர்மனைவி வள்ளி (40), வள்ளியின் அண்ணி ஆனந்தாயி (46). சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைசேர்ந்த பச்சமுத்து (45), இவரது மனைவி தனலட்சுமி (40).
இவர்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூரை அடுத்த அசூர் கிராமத்தில் நடந்த உறவினரின் துக்கநிகழ்சிக்கு சென்றனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜீப்பில் வியாழக்கிழமை காலை சென்னைக்குப்புறப்பட்டனர். ஜீப்பை பரமசிவம் ஓட்டி சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் பகுதியில் வந்த ஜீப், முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது, எதிரேசென்னையில் இருந்து மதுரை வந்த அரசு விரைவு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜீப் உருக்குலைந்து பஸ்ஸின் அடியில் சிக்கியது. ஜீப்பில் சென்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை தீயணைப்புப் படையினர் 30 நிமிடம் போராடி பஸ்ஸின் அடியில் சிக்கிய ஜீப்பை வெளியில்எடுத்தனர். திருநாவலூர் போலீசார் பஸ் டிரைவர் அசோகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications