For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பேத்கார் சிலையில் சகதி: விருதுநகரில் பதட்டம்

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

விருதுநகர் அருகே மர்ம மனிதர்கள் அம்பேத்கர் சிலை மீது சசதியை பூசியதால் அந்த பகுதி முழுவதும் பதட்டம்ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டியப்பட்டியில் அம்பேத்கார் சிலை உள்ளது. இந்த சிலை மீது அடையாளம்தெரியாத சிலர் சகதியை பூசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையை அவமதிப்புசெய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இதுபற்றி ஜெயபாண்டி என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X