நிலக்கரி வழக்கில் ஜெ.க்கு 3வது விடுதலை
சென்னை:
நிலக்கரி வழக்கில் ஜெயலலிதா நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார்திமுக ஆட்சியின் போது வழக்கு தொடர்ந்தனர்.
அப்போதைய தனி நீதிபதி ராதாகிருஷ்ணன், 99ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி ஜெயலலிதா மற்றும் மறைந்தமுன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிதங்கராஜ், ஜெயலலிதாவை தனி நீதிமன்றம் விடுவித்து சரி தான், என்று உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக நேற்று ஜெயலலிதா வழக்கிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.