பாசனத்திற்காக மேட்டூர் அணை மீண்டும் திறப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
பலத்த மழை காரணமாக கடந்த 23ம் தேதி மூடப்பட்ட மேட்டூர் அணை மீண்டும் திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனப் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்ததால், மேட்டூர் அணைமூடப்பட்டது.
தற்போது மழை குறைந்துள்ளதையடுத்து, பாசனத்திற்குப் போதுமான நீர் இல்லை என்று விவசாயிகள்தெரிவித்தனர்.
இதையடுத்து வரும் ஜனவரி 28ம் தேதி வரை மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குவேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று, நேற்று (வெள்ளிக்கிழமை) மேட்டூர் அணை மீண்டும் திறக்கப்பட்டது.
நொடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications