முஷாரப் விமானம் இந்திய வானில் பறக்க பாக். வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நேபாளம் செல்லும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் செல்லும் விமானம் இந்திய வான் பகுதியில் பறப்பதற்குஅனுமதிக்க வேண்டும் என்று அந்நாடு இன்று (சனிக்கிழமை) கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் சார்க் மாநாடே ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் இந்திய வான் பகுதியில் முஷாரப்பின் விமானம் பறக்க அனுமதிவழங்கப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது.
ஆனால் வேறு வழியாக முஷாரப்பின் விமானம் செல்லும் என்று நேற்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில் இந்திய வான் பகுதியில் முஷாரப்பின் விமானம் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான்இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வேண்டுகோளை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுவிட்டது என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர்ஜலீல் அப்பாஸ் ஜிலானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications