For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் மருத்துவக் கல்லூரியிலிருந்து ரூ.2 கோடி மதிப்பு தேக்கு மரம் கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 200க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை ஒருகும்பல் இரவோடு இரவாக வெட்டிகடத்தி சென்றுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியைக் கட்ட மத்திய அரசு இரும்பாலை நிறுவனம் 150 ஏக்கர் நிலம் வழங்கியது.

கல்லூரி வளாகத்திலேயே 10 ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு உரியமுறையில் பராமரிக்கப்பட்டன. இந்த மரங்களை உரிய பருவத்தில் பணமாக்கி கல்லூரி வளர்ச்சிக்கு செலவிடும்படிஅரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இரும்பாலைப் பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் மர்ம கும்பல்களால் தேவைப்படும் போதெல்லாம் இந்தமரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து200க்கும் மேற்பட்ட மரங்களை இரவோடு இரவாக வெட்டி கடத்தி சென்றுள்ளது.

இச்சம்பவம் கல்லூரி முதல்வர் டாக்டர் கணபதிக்கு தெரிய வந்ததையடுத்து இரும்பாலை போலீசாரிடம் அவர்தபால் மூலம் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X