எதற்கும் தயாராக இருங்கள்: மக்களுக்கு வாஜ்பாய் கோரிக்கை
டெல்லி:
பாகிஸ்தானுடனான போரைத் தவிர்ப்பதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்க முடியுமோ அந்த அளவுக்குமுயற்சிப்போம் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். ஆனாலும் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தானின் எல்லை தாண்டியதீவிரவாதச் செயல்கள் மூலம் ஏற்கனவே போர் மூண்டுவிட்டது என்றார் வாஜ்பாய்.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா தாக்கப்பட்ட பிறகு தீவிரவாதம் என்றால் என்ன என்பதைப் பெரும்பாலானநாடுகள் உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது.
அதே உணர்வுடன் எல்லை கடந்த தீவிரவாதத்தை இந்தியாவில் ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் மீது தொடர்ந்துநெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அவர் மற்ற நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது வாஜ்பாய் இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications