நாளை கூடுகிறது பாமக செயற்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) செயற்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) திண்டிவனத்தில் நடக்கிறது.
பாமகவின் தாராபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி கட்சியில் இனி நான் நீடிக்க போவதில்லை, தனத்து செயல்படபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரை செங்கோட்டையன் கடத்தி, அதிமுகவுக்கு இழுத்து விட்டதாகபாமகவினர் கூறிவருகின்றனர்.
மேலும் பாமகவை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறப் போவதாக கட்சிக்குள்ளேயே பெரும் பதற்றம்நிலவுகிறது.
இந்நிலையில் வரும் இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, அல்லது மீண்டும் திமுக கூட்டணியில்தொடர்வதா என்பதைப் பற்றி ஆராய அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியின் செயற்குழு மற்றும்பொதுக்குழுவைக் கூட்ட திட்டமிடப்பட்டது.
இதன்படி நாளை திண்டிவனத்தில் உள்ள ராமதாசுக்கு சொந்தமான தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் செயற்குழுகூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications