For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி பேரன்களுக்கு முருகன் கோவிலில் மொட்டை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விபூதி பூசுவதை முட்டாள் தனம் என்று சொல்லும் கருணாநிதி, பேரன்களுக்கு முருகன் கோவிலில் மொட்டைபோடும் தன் வீட்டுப் பெண்களுக்கு போதிக்க தயாரா என்று திராவிடர் தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர்காமாட்சி நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காமாட்சி நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்கள் இட மாற்றம், அரசு ஊழியர்கள் இடமாற்றம், போலீசார் இடமாற்றம், நர்சிங் கல்வி போன்றவற்றிறகுகவுன்சிலிங் முறை கொண்டு வந்ததன் மூலம் பெரிய மோசடியை ஜெயலலிதா தடுத்துள்ளார்.

இதுபோன்ற பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் எங்கள் கட்சிஆதரிக்கும்.

கண்ணகி சிலை பிரச்சினையை கருணாநிதி பூதாகரமாக்கப் பார்க்கிறார். இவருக்கு ஆதரவாக காங்கிரஸ், தமாகா,கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றன. இந்த கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாது.

மஞ்சள் துண்டை போர்த்திருக்கும் கருணாநிதி, விபூதி பூசுவதை விமர்சிக்கிறார். அவருடைய பேரக்குழந்தைகளுக்கு முருகன் கோவிலில் மொட்டை போடுகின்றனர் அவருடைய குடும்பத்தினர்.

அவருடைய வீட்டு பெண்களிடம் விபூதி பூச வேண்டாம் என்று அவர் போதிக்க தயாரா? ஊருக்கு உபதேசம்செய்யும் வேலையை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காமாட்சி நாயுடு கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X