For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா வழியாக காட்மாண்டு செல்கிறார் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, சீனா வழியாகநேபாளம் செல்ல முடிவு செய்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.

இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்அமலுக்கு வருகிறது.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு முஷாரப் செல்லும் விமானமும்இந்திய வான்பகுதி வழியாகத்தான் செல்ல முடியும்.

ஆனால் இந்தியா விதித்துள்ள தடையால் சீனா வழியாகத்தான் முஷாரப்பின் விமானம் காட்மாண்டு செல்லும்என்று பாகிஸ்தான் அறிவித்து விட்டது.

முன்னதாக பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் முஷாரப்பின் விமானத்தை மட்டும் இந்திய வான்பகுதியில் பறக்கஅனுமதி தரப் போவதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானும் இந்திய அரசிடம் இதற்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் தடை அறிவிக்கப்பட்ட பிறகும் இந்திய வான்பகுதியில் செல்ல தனக்கு விருப்பமில்லை என்று முஷாரப்அறிவித்து விட்டார். இதையடுத்து அவருடைய விமானம் சீனா வழியாகவே செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் முஷாரப் இறங்கப் போவதில்லை:

இதற்கிடையே சீனா வழியாகச் செல்லும் முஷாரப் பெய்ஜிங்கில் இறங்கப் போவதில்லை என்று சீனாஅறிவித்துள்ளது.

ஜனவரி 3ம் தேதி பெய்ஜிங் வரும் முஷாரப், உடனடியாகவே காட்மாண்டு கிளம்புவார் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாங் குயி கூறினார்.

பெய்ஜிங்கிலிருந்து காட்மாண்டுக்குச் செல்வதற்கான வழி பாகிஸ்தான் விமான பைலட்டுகளுக்குப் பரிச்சயம்இல்லை என்பதால் சீன விமான பைலட்டுகளே முஷாரப்பின் விமானத்தை காட்மாண்டுக்கு இயக்கப்போவதாகவும் முன்னதாகச் செய்திகள் வந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X