For Daily Alerts
Just In
எங்கள் நாட்டில் ஒசாமா இல்லை: பாகிஸ்தான் அலறல்
இஸ்லாமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி வந்துவிட்டதாக வரும் செய்திகளை அந்நாட்டுவெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் மறுத்துள்ளார்.
ஆனால் எங்கள் மண்ணில் நுழைந்தால் அவனை நிச்சயம் கைது செய்வோம் என்றும் சத்தார் கூறினார்.
பின் லேடன் பிடிபட்டால் அவனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பீர்களா என்று கேட்டதற்கு, நிச்சயமாக அவனைஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையிடம் ஒப்படைப்போம் என்றார் சத்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வர முயற்சிக்கும் அல்-கொய்தா மற்றும் தலிபான்களைத் தடுப்பதற்காக அந்நாட்டுஎல்லையில் அதிக அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்தால் இங்குள்ள படையினரை இந்திய எல்லைக்குஅப்புறப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]