இடைத் தேர்தலுக்கு பிறகே ஜெ. முதல்வராவார்: பன்னீர்
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பிறகே முறையாக அவர் முதல்வராவார் என்றுதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று, அதன் பிறகே தமிழக முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வார்.
ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் பெருவாரியான வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவதாக ஜெயலலிதாமுடிவெடுத்துள்ளார். அவருடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியைவிட்டு கொடுப்பது பற்றி அவர்தான் முடிவு செய்வார்.
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் அட்வான்ஸாக வங்கிகள் மூலம் ரூ.2,000வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொகையை ஊழியர்கள் 10 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும். அதற்குரிய வட்டியை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications