அத்வானியை கொல்ல திட்டம்: 11 தீவிரவாதிகள் ஊடுருவல்
டெல்லி:
டெல்லியில் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாகவும்,அவர்கள் அத்வானி உட்பட பல முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கிடைத்துள்ளது.
இந்த தகவலின்படி அல்-கொய்தா மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய இயக்கங்களை சேர்ந்த 11 தீவிரவாதிகள்,டெல்லியில் ஊடுருவியிருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஓமர் அப்துல்லா ஆகியோரை ஜனவரி 15க்குள் கொல்ல முடிவுசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், காஷ்மீர் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருக்கும், ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும் தாக்குதல்நடத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத எதிர்ப்பு படையான கேட்ஸ் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பலஇடங்களில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, உளவுத்துறை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தகூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ், ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications