குமாரமங்கலம் மகன் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ளநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பெங்களூரில் வசித்து வரும் ரங்கராஜனின் மகன் கிருஷ்ணன் குமாரமங்கலம் நேற்று (திங்கள்கிழமை)புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்.
அப்போது அவருடைய வீட்டின் பால்கனி கதவை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர்கள், தங்க, வைர,வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு மேல் வந்த கிருஷ்ணன் குமாரமங்கலம் குடும்பத்தினர்,நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கொள்ளையர்களை பெங்களூர் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications