காசு அடிக்கும் கருவி தயாரித்த விஞ்ஞானிகள் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
5 ரூபாய் நாணயம் செய்யும் இயந்திரத்தை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோட்டையன் ஊரை சேர்ந்த மூன்று பேர் 5 ரூபாய் நாணயம் செய்யும்இயந்திரத்தை தயாரித்துள்ளனர்.
இந்த இயந்திரத்தால் துத்தநாகம் மற்றும் அலுமினியத்தால் ஆன நாணயங்களை செய்ய முடியும்.
இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரிடம் இந்த இயந்திரத்தைகாண்பித்து அதில் எப்படி நாணயத்தை அச்சடிப்பது என்றும் விளக்கி உள்ளனர்.
இந்த இயந்திரத்துக்கு இவர்கள் ரூ.20,000 விலை பேசியுள்ளனர்.
உடனடியாக இசக்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த கும்பலை கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications