முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்களுடன் வாஜ்பாய் திடீர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து வரும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் 5 முன்னாள் பிரதமர்களுடன் பிரதமர் வாஜ்பாய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
இன்று பிற்பகல் பிரதமரின் இல்லத்தில் வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ்,தேவெ கெளடா, குஜ்ரால் ஆகியோர் கூடினர். அவர்களுடன் மதிய உணவு அருந்தியவாறே பிரதமர் ஆலோசனைநடத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்துவாஜ்பாய் விளக்கினார்.
இந்தச் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அத்வானியும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications