முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்களுடன் வாஜ்பாய் திடீர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய-பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து வரும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் 5 முன்னாள் பிரதமர்களுடன் பிரதமர் வாஜ்பாய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

இன்று வாஜ்பாயின் இல்லத்தில் மதிய உணவுக்கு இந்தத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கூட்டம்குறித்து சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் இதை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது.

இன்று பிற்பகல் பிரதமரின் இல்லத்தில் வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ்,தேவெ கெளடா, குஜ்ரால் ஆகியோர் கூடினர். அவர்களுடன் மதிய உணவு அருந்தியவாறே பிரதமர் ஆலோசனைநடத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்துவாஜ்பாய் விளக்கினார்.

இந்தச் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அத்வானியும் உடனிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+