For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்த ஆண்டும் (2002) வழக்கமான உற்சாகத்துடன் தமிழக மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்.

நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு சரியாக 12 மணி அடித்ததுமே தமிழக மக்களிடையே உற்சாக வெள்ளம்கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.

பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் 2002ம் ஆண்டை தமிழக மக்கள் அன்புடன் வரவேற்றனர்.

நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிபுத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இளைஞர்களின் உற்சாகத்தைக் கேட்கவும் வேண்டுமா? பைக்குகளை எடுத்துக் கொண்டு பறந்த இளைஞர்கள்,பெரும் கூக்குரலை எழுப்பி சாலையில் போவோருக்கும் வருவோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இளைஞிகளையும் தொற்றிக் கொண்டது இந்தப் புத்தாண்டு உற்சாகம். ஆண்கள்-பெண்கள் பேதமில்லாமல் இந்தஇளம் பெண்களும் தங்களுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பலத்த கரகோஷங்களுடன் புத்தாண்டுவாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டனர்.

பெரிய பெரிய ஓட்டல்களில் சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு நேற்றுநள்ளிரவு 12 மணிக்கு முன்பே ஆடல், பாடல் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த மக்கள், 2002 பிறந்ததும்ஆடிப் பாடித் தீர்த்து விட்டனர்.

"தண்ணி"யடித்து கலாட்டா செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார்எச்சரித்ததன் விளைவாக, இளைஞர்கள் இவ்விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர் (சத்தம் போடாமல்வீட்டுக்குள்ளேயே "வேலை"யை முடித்துக் கொண்டனர்).

வழக்கம்போல சாட்டிலைட் டி.விக்கள் இந்தப் புத்தாண்டுக்கும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலக்கிவிட்டன. சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் செய்து விட்டன.

இவ்வளவு களேபரங்களுக்கும் இடையில் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் அமைதியாகப்புத்தாண்டைக் கொண்டாடினர். இவர்கள் கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெரிய கோவில்களிலும் நேற்று இரவு முதலே கோவில்களில் நல்ல கூட்டம்காணப்பட்டது. பிறந்துள்ள 2002ம் ஆண்டிற்கான சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

கிருஸ்தவர்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடினால்தான் கிருஸ்துமஸ் முடிவுக்கு வரும். நேற்றிரவுதேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X