அதிமுகவினர் திருந்தவில்லை: வைகோ குற்றச்சாட்டு
சென்னை:
கடந்த 1991-96ல் ஆட்சியிலிருந்தபோது அதிமுக எப்படி நடந்து கொண்டதோ அப்படியேதான் இப்போதும்நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் திருந்தவே போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
ஏற்கனவே கூறியதுபோல இடைத் தேர்தல் நடைபெறும் 3 சட்டசபைத் தொகுதிகளிலும் மதிமுக தனித்துப்போட்டியிடுகிறது.
தமிழகர் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாக இருந்த கண்ணகி சிலையை அகற்றியிருப்பது கடும்கண்டனத்திற்குரியது.
இந்தத் தவறான அணுகுமுறை மூலம் அதிமுகவினர் இன்னும் திருந்தவில்லை என்றே தெரிகிறது.
முந்தைய 1991-96ல் ஆட்சி செய்தபோது அவர்கள் செய்த அராஜகங்களுக்கு மக்கள் தேர்தல் மூலம் பாடம்புகட்டினார்கள்.
தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளித்துள்ள போதிலும் அவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல்மீண்டும் அராஜக ஆட்சியையே நடத்தி வருகின்றனர்.
அதிமுகவினருக்குப் படிப்பினையே இல்லை. அவர்கள் திருந்தவில்லை. இனியும் திருந்தப் போவதில்லை என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications