தமாகா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: வாசன்
சென்னை:
தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் எழுச்சியுடனும், சுறுசுறுப்புடனும் உள்ளதால் எங்களின்வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
தமிழகத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு நேற்று (திங்கட்கிழமை) சென்னை வந்த வாசன், நிருபர்களிடம்கூறியதாவது:
அப்பாவின் மறைவுக்கு ஆறுதல் சொல்லவே காங்கிரசைச் சேர்ந்த திரிவேதி எங்கள் வீட்டுக்கு வந்தார். இதைத்தவிரவேறு அரசியல் எதுவும் நாங்கள் பேசவில்லை.
ராஜ்ய சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சிநிர்வாகிகளுடன் பேசி பிறகு முடிவு செய்வோம்.
தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்களிடம் எழுச்சியும், சுறுசுறுப்பும் காணப்படுகிறது. நிறைய இளைஞர்கள்ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து வருகின்றனர். கட்சி பலம் பெருகி வருகிறது. தமாகாவின் வளர்ச்சியை யாராலும்தடுக்க முடியாது.
தமாகாவை காங்கிரஸில் இணைக்க வேண்டும் என்று இளங்கோவன் கடிதம் அனுப்பியுள்ளார். அவரதுநல்லெண்ணத்துக்கு நன்றி என்று கூறினார் வாசன்.