சார்க்கில் பாக்.குடன் "நோ" பேச்சு: ஜஸ்வந்த் சிங் உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
எல்லையில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பாகிஸ்தான்அறிவித்துள்ளது.
ஆனாலும் நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் உள்பட 20 பேர் மீது பாகிஸ்தான் நடவடிக்கைஎடுக்க வேண்டும் அல்லது தன்னிடம் ஒப்படைத்தால்தான், பேச்சுவார்த்தை குறித்தே பேச முடியும் என்று இந்தியாதிட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இதற்கிடையே சார்க் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நேபாள தலைநகர் காட்மாண்டுவில்நடைபெறவுள்ளது. ஜஸ்வந்த் சிங்கும், அப்துல் சத்தாரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications