For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் பெண் உள்பட 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

நகர்:

காஷ்மீரில் ஒரு கிராமத்தில் நுழைந்து தீவிரவாதிகள் சுட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள அகாம்-செரிப் என்றஇடத்தில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் சுட்டதில் சர்வாரா என்ற அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்தார்.

இந்த பெண்ணின் உறவினரை பலாத்காரமாக தீவிரவாதிகள் இழுத்து செல்ல முயன்ற போது இந்த பெண்தடுத்ததால் தீவிரவாதிகள் சுட்டுள்ளனர்.

மேலும் பட்காம் மாவட்டத்தில் உள்ள போஷ்கர்-காக் என்ற இடத்திலும் வீடு புகுந்து இரண்டு பேரை தீவிரவாதிகள்சுட்டுள்ளனர்.

மேலும் நகரில் உள்ள மீர்காபாத் என்ற இடத்திலும் ஒருவரை சுட்டு கொன்று உள்ளனர்.

மேலும் பாரமுல்லா மாவட்டத்தில் தங்மாரா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கேம்பை நோக்கி தீவிரவாதிகள்சரமாரியாக சுட்டுள்ளனர். அவர்களும் தீவிரவாதிகளை நோகி பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆனால் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X