விபூதி விவகாரம்: கருணாநிதியைக் கண்டித்து சிவசேனா போராட்டம்
சென்னை:
இந்துக்கள் விபூதி (திருநீறு) பூசுவதை கேலி செய்து பேசி வரும் திமுக தலைவர் கருணாநிதியைக் கண்டித்துசிவசேனா கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெற்றியில் விபூதி பூசுவதைக் கிண்டலடித்து கருணாநிதி சமீபத்தில் பேசினார். இது இந்துக்களிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு இந்து அமைப்புகள் இதைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன. இந்து முன்னணிசார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கருணாநிதியின் விஷமப் பேச்சைக் கண்டித்து அவரது கோபாலபுரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டம் நடத்துவதற்காக அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்னை அண்ணா மேம்பாலம் அருகேஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக கருணாநிதி வீட்டுக்குச் செல்ல முயன்றனர்.
ஆனால் போலீஸார் அவர்களை ஊர்வலமாக செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கேயே சிறிது நிேரம்அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications