சார்க் மாநாடு: நாளை நேபாளம் செல்கிறார் வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் நாளை (வியாழக்கிழமை) நேபாளம் செல்கிறார்.

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான்உட்பட 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும், வறுமையை ஒழிக்கவும், பயங்கரவாதத்தைஅடியோடு ஒழிக்கவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் 4 அம்ச திட்டம் ஒன்றையும் நிறைவேற்ற சார்க் மாநாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. ஐநாசபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சார்க் நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் இந்த மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதற்காக லக்னோவிலிருந்து நாளை காட்மாண்டு புறப்படுகிறார் வாஜ்பாய்.டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக அவரது தனி விமானம் லக்னோவிலிருந்து செல்லவுள்ளது.

அதனால் அவர் இன்றே (புதன்கிழமை) அவர் லக்னோவுக்கு புறப்பட்டு சென்று விட்டார். அங்கு அகில இந்தியமேயர்கள் மாநாட்டிலும், இந்திய அறிவியல் மாநாட்டிலும் கலந்து கொண்ட பிறகு,, நாளை பகல் 12.50 மணிக்குகாட்மாண்டு புறப்படுகிறார்.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் எந்தவிதத்திலும்பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஏற்கனவே வாஜ்பாய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+