இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக முழு ஆதரவு
சென்னை:
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.
பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கஉள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக-திமுக இரு கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதியை வீட்டில் சந்தித்துபேசினார். திமுகவை இடைத் தேர்தலில் ஆதரிப்பதாக அறிவித்தார்.
இன்று கருணாநிதியை பா.ஜ.க. மாநிலப் பொது செயலாளர் இல.கணேசன் அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்துபேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது.
சந்திப்பு முடிந்து வெளியில் வந்த கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கருணாநிதியை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. மேலும் அவர் என்னிடம் தொலைபேசியில் அழைத்துசந்திக்க வேண்டும் என்றார். அதனால் தான் பார்க்க வந்தேன். நாங்கள் இடைத் தேர்தல் குறித்து பேசினோம். மூன்றுதொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவதாக முடிவு செய்திருப்பதாக சொன்னார்.
இதற்கு முன்பு நடந்த தேர்தலிலும் அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தான் போட்டியிட்டுள்ளனர்.அதனால் இப்போதும் அவர்கள் தான் அங்கு போட்டியிட வேண்டும். அது தான் நியாயம்.
இந்த மூன்று தொகுதிகளிலும் திமுகவை ஆதரிக்க உள்ளோம். திமுக வெற்றி பெறுவதற்கு பாஜக தீவிரமாகஉழைக்கும் என்றார்.
பா.ஜ.க-திமுக இடையே உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில், இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாகபா.ஜ.க. அறிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.