தமிழகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்
சென்னை:
ஸ்டார் டிவி உள்ளிட்ட சாட்டிலைட் சானல்களின் சந்தா கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை முதல் இந்த சேனல்களின் ஒளிபரப்பை காலவைரயின்றி நிறுத்தி வைக்கப் போவதாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்சங்கம் முதலில் வசனம் பேசியிருந்தது. ஆனால், இந்த இன்று இந்த சாட்டிலைட் சானல்களின் ஒளிபரப்பை அவர்கள் நிறுத்தவில்லை.அவை வழக்கம்போல் ஒளிபரப்பாயின.
ஸ்டார் டிவி உள்ளிட்ட பல்வேறு கட்டண சானல்களின் சந்தாக் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. ஆனால் இந்தக் கட்டண உயர்வை ஏற்கமுடியாது என்று தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர். இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்குமுன்பு ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தினர். அன்று கட்டண சானல்களின் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாமல் இருட்டடிப்புசெய்தனர்.
இந் நிலையில் வியாழக்கிழமை சன் கேபிள் விஷன் மூலமாக ஒளிபரப்பாகும் அனைத்து தனியார் சாட்டிலைட் சானல்களின்ஒளிபரப்பையும் நிறுத்த சங்கம் முடிவு செய்திருந்தது. இருப்பினும் வழக்கம் போலவே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
இதுகுறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவேநிகழ்ச்சிகள் வழக்கம் போல ஒளிபரப்பாகி வருகின்றன என்று கூறினர்.
இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தத் திட்டமிட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கேபிள் டிவிஆபரேட்டர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.