நடிகர் ராஜ்குமார் கடத்தல்: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து பணம் பெற்றதாக கூறி கைதுசெய்யப்பட்ட 5 பேரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து ஏராளமான பணம் பெற்றதாக வீரப்பனின் உறவினர்களான மாதையன்,அய்யாத்துரை, முனியம்மாள், அமராவதி, குப்பாயி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதை எதிர்த்து இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்ரமணியம், இவர்கள் மீது ராஜ்குமார் குடும்பத்தினர் சார்பில் 5 பேர் மீதும் புகார்கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார்.
அதற்கு அரசு வக்கீல் இல்லை என்று பதிலளித்தார். இதையடுத்து ஐந்து பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்ய நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications