நேபாளத்தில் பாக். தூதரக அதிகாரி கைதாகி விடுதலை
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு:
இந்திய, அமெரிக்க ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நேபாளபோலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
நேபாளத்தின் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான தாமெல் நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது, போலீசார்அவரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த இந்திய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் கள்ள நோட்டுக்களாகும். அதாவது நேபாளத்தில் இந்தியாவின்500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.
இவை தவிர 9,200 அமெரிக்க டாலர்களையும் சிராஜ் வைத்திருந்தார்.
சுமார் 13 மணி நேரம் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் சிராஜ். பின்னர் தூதரகப்பாதுகாப்புச் சட்டப்படி அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த விவரம் குறித்து விளக்கமளிக்க பாகிஸ்தான் தூதரகம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications